சேலை நுாலும் என் சாலை ஆகின்றது..
வாழை இலை நீர்
விரும்பும் கிளிகள்..
அதைவிட்டு
உன் வாய் வழி நீர்
விரும்புகின்றது..
காலை எழு கதிரவன்
கதிர்களும் உன்
தோள் தொட்டு
குளிர்கின்றது..
சோலை மலரும்
மலர்களும் உன்
வாசம் நுகர்கின்றது..
மாலை வருகின்ற
மேகம் உன்
செவ்விதழ்
குழைகின்றது..
சேலை இணைகின்ற
நுாலும்
என் சாலை ஆகின்றது..
ஆலை இடுகின்ற
கரும்பும் உன்னில்
ஆசைப்படுகின்றது..
வேலை ஏதுமின்றி
எனக்கும் உன்னைக்
காதலிப்பதே
வேலையாகிறது..
பாலையாய் உன்
ஈரமில்லா
இதயம்...
கனவின் இசை.
கும் இருட்டில்-நீளும்
இரவுகளின் காவலில்
அருந்ததிகளின்
ஆசீா்வதிப்புக்களுடன்
மெல்ல அசைகிறது -இசை
சாளரங்கள் மூடப்பட்ட-பின்னும்
முற்றுப்பெறமறுத்து
கனவுகளில் வழிந்தோடும்
நீா்ச் சொரியலாய்-என்னுள்
புகுந்து தாவுகின்றது
கனவின் இசை
நான்
தேடும்என்னவனாய்..
அவனுக்கு தெரியுமோ
என்னமோ?இசைக்குத்
தெரியும் வெற்றிடமான -என்
இதயத்தில் கனவைநிரப்புவது
எப்படியென்று..
தொலை தூரம் நான்
கானும்என்னவனின்
சிரிப்பொழியை மென்றுவந்து-
இரைமீட்டு செல்கின்றது
என் கனவில் தினமும் -இசை
தகிக்கும் முத்தங்களின்
நினைவுகளின்
வெப்பக் கனதி
படுக்கையை நனைக்க...
இரவுக்...
அழகுத் தெய்வம்
மங்கியதோர் நிலவினிலே கனவிலிது கண்டேன்
வயதுபதி னாறிருக்கும் இளவயது மங்கை
பொங்கிவரும் பெருநிலவு போன்றவொளி முகமும்
புன்னகையின் புதுநிலவும் போற்றவருந் தோற்றம்
துங்கமணி மின்போலும் வடிவத்தாள் வந்து
தூங்காதே யெழுந்தென்னைப் பாரென்று சொன்னாள்
அங்கதனிற் கண்விழித்தேன் அடடாவோ! அடடா!
அழகென்னுந் தெய்வந்தான் அதுவென்றே...
இரு இளம் மருத்துவர்கள் பிரசவித்த”இருளைப் படைத்தல்” கவிதை நூல் – ஓர் பார்வை!!
மருத்துவ உலகின் முத்துக்கள் இரண்டு சேர்ந்து இலக்கியச் சிற்பிக்குள்ளிருந்து அண்மையில் வெகுண்டெழுந்திருக்கின்றன. பேரன்பும் பெருங்கோபமும் கொண்டோரால் வெளியிடப்பட்டிருக்கிறது.
செ.மதுரகன், பா.திலீபன் இணைந்து வவு/தமிழ் மாமன்றத்தினூடாக இப்படைப்பை வெளியிட்டிருக்கிறார்கள். உலகிற்கே ஒளி தரும் மருத்துவர்களால் இருள்...
மரணம் தொடும்போது..
எட்டு வயது காதலும் எட்டாத நேசமும்
பட்டு மாமியும் சிட்டு சிலுமிசமும்..
கொட்டும் அருவியும் கூவும் குயிலும்
கொடுத்த கடனும்கொடுக்காத முத்தங்களும்
கெடுத்த குடியும் கேட்டவன் சொல்லும்..
பள்ளியின் கடைசி நாளும் பட்டத்தின் பாராட்டும்
வள்ளி திருமணமும் வடிவேலன் தீர்த்தமும்
அம்மா அன்பும்...
ந(ர)கரத்தில் வாழ்ந்தாலும் நான் கிராமத்தில் பிறந்தவனே…..
வாய்கால் தண்ணீரில்
மூழ்கிக் குளித்து
வரும் சிறுநீரையும்
கலக்க விட்டு
மேல் தண்ணீர் விலக்கி
இருகைகள் இணைத்து
அள்ளிப் பருகுவேன்
அப்போது புது
உற்சாகம் என்னுள்
பிறக்கும்..
இப்போ
கூல்வாட்டர் குடிக்கின்றேன்
குனிர் காய்ச்சல்
அடிக்கின்றது...
ஒல்லித் தேங்காய்க்கு
பூவரசம் தடி சீவி
கொம்புகள் அமைத்து
முள்முருக்கம் சோத்தியிலே
வண்டி செய்து
தங்கையை அதில் அமர்த்தி
வெட்ட வெளி வெயில் எல்லாம்
இழுத்து...
யுடோபியா கிரகத்தில் சாதி (குட்டிக்கதை)..!
யுடோபியா கிரகத்தில் மக்கள் முப்பது வெவ்வேறு வண்ணங்களில் தோல் நிறங்கள் கொண்ட முப்பது சாதிகளாக வாழ்ந்து வந்தார்கள். அவர்களுள் தலைவரை தேர்ந்தெடுப்பது ஜனநாயக முறையில் நடந்தது.
சாதி விட்டு சாதி திருமணம் செய்தால் எட்டு கைகள்...
என் தேசத்தைப் பற்றி – மித்யா கானவி!!
என்னடி தோழி
எப்படி சுகம்?
சிட்டுக் குருவி
இசை மறந்த எம்
தேசத்தைப்பற்றி
என்னத்தை சொல்ல -நான்
துருப்பிடித்த துப்பாக்கிகள்
எல்லைதாண்டியே வருவதால்
சத்தமின்றி கொல்லும்
சுவாச நோய் பற்றி...
வாகை மரங்கள்
உதிரும் கண்ணீரில்
அரசமரங்கள்
உயிர்ப்பித்தல்
பற்றி-எப்படி
சொல்ல நான்..
வற்றிப் போகாத
வரட்டுப் பிடியில்
ஒற்றை காலில்
நிற்கும் கொக்கை-பார்த்து
வெக்கிப் போகும்
தூரோகத்தை பற்றி
எப்படிச் சொல்லுவேன்..
செம் பருந்தை...
கடவுள் வரம்
காலம் வரும் எனக்
காத்திருந்தால் நம்முடைய
இளமை போய்விடும் ...!
பலன் கிடைக்கும் எனக்
காத்திருந்தால் நம்முடைய
முயற்சி போய்விடும் ...!
எதையும் யாரையும்
எதிர்பார்த்துக் கொண்டிருந்தால்
நம் திறமைகள் அனைத்தும் போய்விடும்...
நினைவெல்லாம்…
இதயம் கனக்கிறசோகமாய்
மாலைக்குருவி
பாடிச்செல்கிறது..
அது உன்னை பற்றிய கவிதைகளை
ஞாபகப்டுத்துகிறது..
நினைவுத்துயர் சூழும்
வேளைகளில்
உன் பாடல்களை
திரும்பபாடுகிறது
இந்த மாலை..
நிலவிருந்து எனைத் தழுவும்
ஒளியி்ல்
உன் தன் கைகளா?
-வேலணையூர்-தாஸ்-
கண்டேன் = கொண்டேன்
தோகையில்லா
மயில்
ஒன்றை கண்டேன்
கூண்டில் சிக்காத
பறவை
என்று எண்ணிக்கொண்டேன் !
சிறகில்லா
அன்னப்பறவை
ஒன்றை கண்டேன்
சிற்பியால் செதுக்கப்பட்ட
சிற்பம்
என்று எண்ணிக்கொண்டேன் !
வண்ணமில்லா
ஓவியம்
ஒன்றை கண்டேன்...
பட்ட மரத்தடியில் ஓர் பருவக் குழந்தை!!
வெள்ளிக் கோலங்களால்
விடிந்து கிடந்தது உறவுகளின்
முற்றம்...
என் மன முற்றம் மட்டும்
இருண்டு கிடந்தது ஏனோ?
எத்தனை வயது வரை என்னைத்
தூக்கிச் சுமந்திருப்பாய்..
தாயின் மார்க்காம்பு சப்பலை விட
உன் உப்பு விரல்க் காம்பு சப்பி
சுகம் கண்ட பிள்ளையல்லவா நான்..
மயிலிறகு கனவு...
இறக்கமுடியாத சிலுவைகள்- வைரமுத்து
சொன்னவள் நான் தான்!
உங்களுக்கும் சேர்த்து
நான் தான் சுவாசிக்கிறேன்
என்று சொன்னவள் நான் தான்!
உங்களைத் தவிர
என் கண்களுக்கு
எதையும் பார்க்கத் தெரியவில்லை
என்று சொன்னவள் நான் தான்!
உங்கள் வாழ்க்கை என்னும் கோப்பையை
என் உயிர் பிழிந்து ஊற்றி நிரப்புவேன்
என்று சொன்னவள்...
வவுனியாவில் நடைபெற்ற திருமதி மைதிலி தயாபரனின் நூல்கள் வெளியீட்டு விழா : ஒரு பார்வை!!
வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் மண்டபத்தில் 04.10.2015 அன்று திருமதி மைதிலி தயாபரனின் நான்கு நூல்கள் வெளியிடப்பட்டிருக்கிறது.
01.தவறுகள் தொடர்கின்றன - கைக்கூ வடிவம்
02.சீதைக்கோர் இராமன் - கவிதை
03.அனாதை எனப்படுவோன் - நாவல்
04.வீடுகளில் மின்சக்தி...
என்னுள் இசையாகிறாய்..
திஸ்ட்ட நடையில்
துள்ளித்திரிந்தேன்
உனைப்பார்த்ததும்
சதுஸ்ட்ட நடையாகி
கல்யானி இசைக்கிறேன்..
ராகமாலிஹாவாய்
குளைகின்றாய்
நீலாம்பரியாய் தோளிடுகின்றேன்
வளைந்து மடியில்
வீணையாகின்றாய்
என் விரல் மூக்கின் நுணிபட
மூச்சு மோகனம் பாடுகிறது..
நான் தட்டிடுவேனெ
தவிலாகின்றாய்
தொட்டிட மனம்
நாயனமாகின்றது
விரல் முட்டிட முட்டிகள்
தபேலாவாகின்றது
இசை கொட்டிட மெட்டிட
உன் கண்களில் வரி தேடுகிறேன்..
எதுகையும் மோனையுமாய்
கண்கள் தொடங்கி
கண்டைக்கால் வரை
கவிதை பெருகுகின்றது..
உலகிலேயே...
நினைவுகளின் கனவுத் தொடர்…
வானம்
சூரிய குளியலுக்காய் தயாராகியது..
நிலவு இலவச மின்சாரத்தை
இடை நிறுத்திக் கொண்டது..
நட்சத்திரங்கள்
தலையணை தேடின..
சேவல்களும் குயில்களும்
செய்தி அறிவித்தன..
கதிரவன் வரவேற்பு
புன்னகைக்காய்
மொட்டுக்கள்
உதடுகள் அசைக்கத்
தொடங்கின..
அவள் விழிகளுக்கு மட்டும்
இன்னும் விடியவில்லை
ஏனெனில்..
அவன் நினைவுகளின்
கனவுத் தொடர்
இன்னும் முடியவில்லை..
-திசா.ஞானசந்திரன்-