வவுனியாவில் நடந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் படுகாயம்!!

வவுனியா, ஹொரவப்பொத்தானை வீதியில் குடாகச்சகொடி பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுளனர். இவ் விபத்தில், திருகோணமலை, அன்புவெளிபுரத்தைச்...

வவுனியாவில் மழை பெய்வதை தொடர்ந்து நன்றி செலுத்தும் முகமாக பொங்கல் விழா!!

வவுனியாவில் அண்மைக்காலமாக மழை பெய்யாமல் கடும் வறட்சி நிலவி வந்த நிலையில் அண்மை நாட்களாக தொடர்ந்து மழை பெய்துவருகின்றது. இதனை அடுத்து இதற்கு நன்றி செலுத்தும் முகமாக பொங்கல் நிகழ்வு ஒன்று வவுனியா...

வவுனியாவில் கடையைப் பூட்டி விட்டு உள்ளிருந்து தன்னைத் தானே காயப்படுத்திய வர்த்தகர்!!

வவுனியாவில் வர்த்தக நிலைய உரிமையாளர் ஒருவர் தனது வர்த்தக நிலையத்தினை பூட்டி விட்டு உள்ளே இருந்தவாறு தனது உடம்புப் பகுதிகளை காயப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை (17.08) அன்று மாலை 5...

வவுனியா – கொழும்பு புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் உயிரிழப்பு!!

வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற கடுகதி புகையிரதத்தில் நேற்று (18.08) மாலை 5.30 மணியளவில் நபர் ஒருவர் மோதுண்டு இறந்துள்ளார். அனுராதபுரம் பகுதியிலேயே இன் நபர் மோதுண்டு இறந்துள்ளதுடன் , இறந்தவர் இதுவரை...

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ விஷ்ணு ஆலயத்தில் இடம்பெற்ற கிருஷ்ண ஜெயந்தி உற்சவம்!!

வவுனியா கோவில்குளம் அருள்மிகு  ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ விஷ்ணு ஆலயத்தில் நேற்று (18.08.2014) கிருஷ்ண ஜெயந்தி உற்சவம் மிகச் சிறப்பாக இடம்பெற்றது. நேற்றைய உற்சவத்தில் மாலையில் மாவிளக்குப் பூஜை இடம்பெற்று ஸ்ரீதேவி பூதேவி சமேத...

வவுனியாவில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சிறுவன் பலி!!

வவுனியா கொந்தக்காரன் குளத்தில் வீட்டு சுவர் இடிந்து வீழ்ந்ததில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார். அரச சார்பற்ற நிறுவனமொன்றினால் மீள்குடியேற்ற கிராம மக்களுக்கு அமைத்து கொடுக்கப்பட்ட வீடொன்றில் நேற்று (18.08) இரவு 07.00 மணியளவில் இடம்பெற்ற...

வவுனியாவில் இருந்து நல்லூர் கந்தன் ஆலயத்தை நோக்கி பாதயாத்திரை!!

வவுனியா, வேப்பங்குளம் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் இருந்து நான்காவது வருடமாக நல்லூர் கந்தன் ஆலயத்தின் உற்சவகால பாதயாத்திரை இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகியது. வவுனியா, வேப்பங்குளம் ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் சாமி அம்மா...

வவுனியா குளத்தில் பெருமளவிலான மீன்கள் இறக்கக் காரணம் பாரிய இயந்திரங்களைக் கொண்டு வயல்களுக்கு நீர் இறைக்கப்பட்டமை : நடவடிக்கை...

வவுனியா குளத்தில் பெருமளவிலான மீன்களின் இறப்புக்கு காரணம் அளவுக்கதிகமான நீர் பாரிய இயந்திரங்களைக் கொண்டு வயல்களுக்கு இறைக்கபட்டமையால் அவ்வியந்திரங்களுக்குள் சிக்குண்டு மீன்கள் இறந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. குளத்தில் நீர் மட்டம் திடீரென குறைந்தமையால் மேற்படிசம்பவம்...

வவுனியா குளத்தில் பெருமளவிலான மீன்கள் இறந்த நிலையில் அப்பகுதியெங்கும் துர்நாற்றம் : பொதுமக்கள் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை!!

வவுனியாவில் நேற்று பெய்த மழையின் பின்னர் வவுனியா குளத்தில் பெருமளவிலான மீன்கள் இறந்தநிலையில் காணபடுகின்றது. மேற்படி குளத்தை சூழவுள்ள பிரதேசமெங்கும் துர்நாற்றம் வீசுவதாக பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர். வவுனியா குளத்தை புனரமைக்கும் மற்றும் ஆழமாக்கும்,...

வவுனியாவில் மிகச் சிறப்பாக நடைபெற்ற முத்தமிழ் சங்கம் நிகழ்வு!! (படங்கள்)

வவுனியாவில் சர்வதேச இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் முத்தமிழ் சங்கமம் நிகழ்வு நேற்று (16.08) சிறப்பாக நடைபெற்றது. வவுனியா, சிந்தாமணிப் பிள்ளையார் ஆலய கலாசார மண்டபத்தில் சர்வதேச இந்து இளைஞர் பேரவையின் தலைவர்...

வவுனியாவில் வறட்சியை போக்க இன்றும் மதியம் முதல் இடியுடன் கூடிய கடும் மழை!!

வவுனியாவில் கடந்த சில மாதங்களாக கடும் வெயில் நிலவி வந்ததுடன் கடும் வறட்சியும் மக்களை வாட்டி வதைத்து வந்தது. இன் நிலையில் நேற்று மாலை கடும் இடியுடன் கூடிய மழை பெய்தது. மீண்டும் இன்று...

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர்கள் ஏறாவூர் நகர சபைக்கு பயிற்சி சுற்றுலாவில் விஜயம்!!

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர்கள் களப் பயிற்சி சுற்றுலா நிமித்தம் நேற்று (15.08) வெள்ளிக்கிழமை ஏறாவூர் நகர சபைக்கு விஜயம் செய்தனர். வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் உப தலைவர்...

வவுனியாவில் மின்னல் தாக்கி இருவர் பலி!!

வவுனியா நாமல்கம ரஜ விஹாரையின் பிரதம குரு காலி சிறிநந்த ரத்தன தேரர் மற்றும் அவருடைய உதவியாளர் ஆகியோர் நேற்று (15.08) மின்னல் தாக்கத்தினால் உயிரிழந்துள்ளனர். இச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றது. கடும்...

வவுனியாவில் குடும்பஸ்தர் ஒருவரை காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு!!

வவுனியாவில் குடும்பஸ்தர் ஒருவரை காணவில்லை என வவுனியா பொலிஸ் நிலையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (15.08) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர். வவுனியா, வெளிக்குளம் பகுதியில் வசித்து வந்த ஐயாத்துரை யசோதரன் (49) என்ற...

வவுனியாவில் கைக்குண்டுகள் மீட்பு!!

வவுனியா ஈரப்பெரியகுளம் பகுதியில் நேற்று (14.08) வியாழக்கிழமை மாலை இரண்டு கிரனேட்டுகள் மீட்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டன என வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா ஈரப்பெரியகுளம் பகுதியில் உள்ள அலகல்ல சீர்வேகம குளத்தை சுத்திகரிக்கும் பணியில்...

வவுனியாவில் வறட்சியால் பல மக்கள் பாதிப்புக்குள்ளான இச் சந்தர்பத்தில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையினர் கல்விச் சுற்றுலாவில்...

இலங்கையின் பல பகுதிகளில் என்றும் இல்லாதவாறு கடும் வறட்சி தலைவிரித்தாடுகின்றது. அதிலும் வவுனியா உள்ளிட்ட வடக்கின் அனைத்து மாவட்டங்களும் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வவுனியாவில் பல கிராமங்களில் கடும் வறட்சி நிலவுகின்றது. மக்கள் தண்ணீர்...